May 12, 2026
Thisaigal NewsYouTube
நடுவர் கோமா நிலைக்குச் சென்ற அதிர்ச்சி: ஜப்பான் பேஸ்பால் போட்டியில் புதிய பாதுகாப்பு விதிமுறை அமல்
விளையாட்டு

நடுவர் கோமா நிலைக்குச் சென்ற அதிர்ச்சி: ஜப்பான் பேஸ்பால் போட்டியில் புதிய பாதுகாப்பு விதிமுறை அமல்

Share:

ஜப்பானியப் தொழில்முறை பேஸ்பால் போட்டிகளின் போது நடுவர் ஒருவரின் தலையில் மட்டை தாக்கியதில் அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதையடுத்து, அபாயகரமான முறையில் மட்டையைச் சுழற்றும் வீரர்களுக்கு எதிராகப் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற்ற போட்டியின் போது, மட்டை வீச்சாளர் ஜோஸ் ஒசுனா வீசிய மட்டை கைதவறி நடுவர் தகுடோ கவாகாமியின் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த 30 வயது நடுவர் கவாகாமி, அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது வரை நினைவு திரும்பாமல் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, வீரர்கள் விளையாடும்போது மட்டையைத் தற்செயலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ கைவிட்டு மற்றவர்களைத் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்கப் புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, அபாயகரமான முறையில் மட்டையைச் சுழற்றும் வீரர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதே தவறை இரண்டாவது முறையாகச் செய்தாலோ அல்லது மட்டை மற்றவர்கள் மீது மோதினாலோ சம்பந்தப்பட்ட வீரர் உடனடியாகப் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும், நடுவர்கள் அனைவரும் இனி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியும் அண்மையில் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News