மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் கோலாகலமாகத் தொடங்கிய இவர்களது திருமண வாழ்க்கை, தற்போது மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்துள்ளது.
மனக்கசப்பு காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு முதலே இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில் இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. குறிப்பாக, கணவரிடமிருந்து எந்த ஒரு நஷ்டஈடு அல்லது ஜீவனாம்சத்தையும் ஹன்சிகா கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகைச் சேர்ந்த பலரும் இவர்களது இந்த முடிவுக்கு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.








