May 3, 2026
Thisaigal NewsYouTube
கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சினிமா

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Share:

சென்னை, மார்ச்.14-

கவிஞர் வைரமுத்து இலக்கியத்தில் ஆற்றியுள்ள பங்களிப்பை போற்றும் விதமாக அவருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தேசிய விருதுகள் பல பெற்றிருந்தாலும் கூட, ஞானபீட விருதானது தம்மை மேலும் முனைப்புடன் இலக்கியத்தில் ஈடுபட வைக்கும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இந்த ஞானபீட விருதானது வழங்கப்படுகின்றது.

தமிழில் இதுவரை 2 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த 1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், அவரைத் தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News