உலகக் கிண்ணக் காற்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இப்போட்டியில் அமெரிக்க வீரர் ஃபொலாரின் பலோகன் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். ஆனால் இரண்டாவது பாதியில் எதிரணி வீரர் தாரிக் முஹாரெமோவிச்சை மிதித்ததாகக் கூறி நடுவர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். இதனால் அமெரிக்க அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இருப்பினும் மாலிக் டில்மேன் அடித்த ஃப்ரீ-கிக் கோல் மூலம் அமெரிக்கா தனது வெற்றியை உறுதி செய்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா தனது கால் நூற்றாண்டு கால நாக்அவுட் சுற்றின் வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.








