செயற்கை நுண்ணறிவு சார்ந்த நினைவக சில்லுகளுக்கான தேவை காரணமாக, சாம்சங் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு செயல்பாட்டு லாபத்தில் 1,800 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், இந்நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 10 சதவீதம் வரை சரிந்து, இறுதியில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
சாம்சங் நிறுவனத்தின் இந்த திடீர் வீழ்ச்சி காரணமாக சியோலின் காஸ்பி குறியீடு கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிவடைந்ததுடன், கடந்த இரண்டு வாரங்களாக சந்தையில் நிலவி வரும் வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சாதனை அளவை எட்டியிருந்த காஸ்பி குறியீடு, தற்போது சுமார் 20 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது. சாம்சங் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த சரிவு, உலகளாவிய தொழில்நுட்ப பங்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், ஆசிய பங்குச்சந்தைகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.








