உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 32 அணிகளுக்கான நாக் அவுட் சுற்றில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி கேப் வெர்டே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள கேப் வெர்டே அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அர்ஜென்டினா அணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை டிராவில் முடித்து, உருகுவே மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளைப் பின்னுக்குத் தள்ளி கேப் வெர்டே அணி இந்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தாங்கள் தகுதியின் அடிப்படையிலேயே இங்கு வந்துள்ளதால் அர்ஜென்டினாவுக்கு எதிராக அச்சமின்றி விளையாடுவோம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் புபிஸ்டா தெரிவித்துள்ளார். அதேவேளையில், கேப் வெர்டே அணி தற்செயலாக இந்த இடத்திற்கு வரவில்லை என்பதால் அவர்களைத் தங்கள் அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்று அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறியுள்ளார். இந்தத் தொடரில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆறு கோல்களை அடித்து அர்ஜென்டினா அணியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








