ஹிரோஷிமா: மலேசியாவின் முன்னணி கால்பந்து கிளப்பான ஜொகூர் தாருல் தாஜிம், ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நேற்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், சான்ஃப்ரெஸ் ஹிரோஷிமா அணியை ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 3-2 என வீழ்த்தி இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியின் 90-வது நிமிடத்தில் ஹிரோஷிமா அணி ஒரு பெனால்டி கோல் அடித்தாலும், JDT வீரர்கள் காட்டிய அபார தடுப்பாட்டம் அவர்களை காலிறுதிக்கு இட்டுச் சென்றது. இதன் மூலம் ஆசியாவின் டாப் 8 அணிகளில் ஒன்றாக JDT இடம் பிடித்துள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்கு மலேசிய தேசிய பயிற்சியாளர் பீட்டர் கிளமோவ்ஸ்கி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.








