தாமஸ் கோப்பை போட்டியில் மலேசிய அணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒற்றையர் பிரிவில் திறமையான வீரர்கள் பற்றாக்குறை இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களை மலேசிய பேட்மிண்டன் சங்கம் (BAM) மறுத்துள்ளது. வீரர்களின் திறமை குறித்து முன்வைக்கப்படும் இத்தகைய கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனத் தெரிவிக்கும் வகையில் BAM அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய அணியில் இளம் வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வாய்ப்புகளும் முறையாக வழங்கப்பட்டு வரும் வேளையில், அவர்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தப் பல்வேறு புதிய உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. திறமையான வீரர்களை அடையாளம் காணும் பணிகள் அடிமட்ட அளவில் இருந்து ஏற்கனவே சிறப்பாக நடந்துளது. தற்காலிகத் தோல்விகளைக் கொண்டு வீரர்களின் முழுத் திறமையையும் மதிப்பிட முடியாது எனவும், எதிர்காலப் போட்டிகளில் மலேசிய ஒற்றையர் பிரிவு வீரர்கள் மீண்டும் தங்களை நிரூபிப்பார்கள் என்றும் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








