உலகக் கோப்பைக் காற்பந்துப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டாயத் தண்ணீர் இடைவேளைகள் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பிஃபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு போட்டியின் 22-வது மற்றும் 67-வது நிமிடங்களில் வழங்கப்படும் இந்த மூன்று நிமிட இடைவேளையானது, வணிக லாபத்திற்காக அல்லாமல் முற்றிலும் வீரர்களின் நலம் மற்றும் விளையாட்டு சார்ந்த காரணங்களுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த இடைவேளையின் போது ஒளிபரப்பாளர்கள் விளம்பரங்களை வெளியிடுவதால் இது வணிக நோக்கிலானது என்றும், போட்டியின் வேகத்தையும் போக்கையும் இது சீர்குலைப்பதாகவும் பல பயிற்சியாளர்களும் வீரர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், கடுமையான வெப்பத்திலிருந்து வீரர்களைப் பாதுகாப்பதற்கும், அனைத்து அணிகளுக்கும் சமமான போட்டிச் சூழலை வழங்குவதற்கும் இந்த ஓய்வு அவசியமானது என்றும், இது போட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கவில்லை என்றும் இன்ஃபான்டினோ தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.








