Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பேங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு
உலகச் செய்திகள்

பேங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

Share:

பேங்காக், ஜனவரி.16-

தாய்லாந்தில் கட்டுமானப் பணியின் போது ராட்சத இயந்திரம் ஓடும் ரயில் மீது விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்தில் பாங்காக்கிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகோன் ராட்சசிமாவில், பேங்காக்கில் இருந்து உபோன் ராட்சதானி நோக்கி 195 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் ரயில் மீது, அதிவேக ரயில் பாதைக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்தன. இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இன்று காலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது.

மேலும் இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு கருவிகள் மூலம் இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டனர்.

Related News

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!