Oct 18, 2025
Thisaigal NewsYouTube
வரும் 13 ஆம் தேதி இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா
சினிமா

வரும் 13 ஆம் தேதி இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா

Share:

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தைச் சிறப்பிக்கும் விதமாக வருகிற 13 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related News