சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் சி.ஜே.பி இயக்கத்தின் போராட்டத்தின் மத்தியில், மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி குரல் கொடுத்துள்ளார். எந்தவொரு அரசியல் பக்கத்தையும் சாராமல், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயம் தான் அனைத்துக்கும் மேலானது என்று குறிப்பிட்ட அவர், மாணவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழலை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைதியான முறையில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் உறுதியான குரல்களை மதிக்க வேண்டும் என்றும், ஆக்கப்பூர்வமான உரையாடல்களே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்கு ஆதரவாகவும், பரஸ்பர உரையாடல்களின் அவசியத்தை வலியுறுத்தியும் அவர் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், பிரபலங்கள் பலரும் மாணவர்களுக்கு ஆதரவாகத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.








