ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷன், சாகசம், புதையல் தேடல் மற்றும் ஹெய்ஸ்ட் அம்சங்களைக் கொண்டதாக உருவாகியுள்ளது.
நடிகர் மற்றும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பப் பின்னணியால் எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் வருவது இயல்புதான் என தெரிவித்துள்ளார். “என்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை விளக்குவது என் வேலை அல்ல.
என் படைப்புதான் எனக்கான பதிலாக இருக்கும். படம் வெளியான சில நிமிடங்களிலேயே அந்த எண்ணங்கள் மாறும்,” என அவர் கூறியுள்ளார்.
தன் தந்தையின் புகழால் ஏற்பட்ட அழுத்தம், தன்னை 200 சதவீதம் உழைக்கத் தூண்டியதாகவும், அந்த அழுத்தத்தை ஒரு வரமாகவே பார்ப்பதாகவும் ஜேசன் தெரிவித்துள்ளார்.








