Oct 21, 2025
Thisaigal NewsYouTube
'அவசரப்பட்டு சொல்லிட்டேனே'.. வெங்கட்பிரபுவிடம் வருத்தப்பட்டாரா விஜய்?
சினிமா

'அவசரப்பட்டு சொல்லிட்டேனே'.. வெங்கட்பிரபுவிடம் வருத்தப்பட்டாரா விஜய்?

Share:

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ படத்தை முழுமையாக பார்த்த தளபதி விஜய் ’அவசரப்பட்டு சொல்லிட்டேனே’ என்று அவரிடம் வருத்தப்பட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவான ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தை விஜய் சமீபத்தில் பார்த்ததாகவும் படம் பார்த்து முடித்ததும் வெங்கட் பிரபுவிடம் ‘கலக்கிட்டீங்க, அவசரப்பட்டு திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டேன், இன்னொரு படம் உங்க கூட பண்ணியிருக்கலாம்’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் டீஏஜிங் டெக்னாலஜி குறித்த சில நெகட்டிவ் கமெண்ட்கள் வருவதை அடுத்து அந்த காட்சிகளை மீண்டும் சரி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

மேலும் ‘கோட்’ படம் அட்டகாசமான விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டது என்றும், வித்தியாசமான விஜய் கெட்டப் ஆகியவை இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள் என்றும் கண்டிப்பாக இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய வசூலை கொடுத்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related News