Jul 22, 2026
Thisaigal NewsYouTube
அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
சினிமா

அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

Share:

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நடிகர். படத்தில் நடிக்கும் போதே தன்னுடைய நாட்டுப்பற்று, எல்லோருக்கும் மனதார உதவி செய்வது போன்ற விஷயங்களை அதிகம் காட்டினார். இவரது மகனான சண்முக பாண்டியன் அவரது அப்பாவை போல சினிமாவில் களமிறங்கியுள்ளார் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் படைத் தலைவன். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், கேப்டன் விஜயகாந்தால் தமிழ் சினிமாவில் பயன் அடைந்தவர்கள் பலர், அவர்களில் நானும் ஒருவன்.

அவரால் இன்றைக்கும் பலர் தங்களது பசியைப் போக்கி வருகிறார்கள். கேப்டன் படப்பிடிப்புக்கு வருகிறார் என்றாலே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி விடுவார்கள். அவரது கம்பீரம் வேறு எந்த நடிகருக்கு வரும்.

அதே போல் ரமணா படத்தில் இடம் பெற்ற மிக நீண்ட வசனங்கள் தொடங்கி அவரது டயலாக்குகள் அனைத்துமே அதிகபட்சம் இரண்டு டேக்குகள் மட்டும் தான் எடுத்துக் கொண்டார். படைத் தலைவன் படத்தில் ஒரு யானையும் ஒரு சிங்கமும் நடித்துள்ளது போல் உள்ளது. சண்முக பாண்டியன் தொடர்ந்து வளர வேண்டும். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் கண்கள் அவரது மகன் சண்முக பாண்டியனிடம் அப்படியே இருக்கிறது. இவரை வைத்து ரமணா 2ம் பாகம் எடுக்க ஆசை எனப் பேசியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது