ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.03-
இசை உலகின் ஜாம்பவான் 'தேனிசைத் தென்றல்' தேவா அவர்களின் மாபெரும் இசை நிகழ்ச்சி, வரும் மார்ச் 28 ஆம் தேதி பினாங்கு Setia SPICE Arena அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு, அண்மையில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் மற்றும் பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் உள்ள தேவாவின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்தனர்.

இசையமைப்பாளர் தேவா, பினாங்கில் படைக்கும் இரண்டாவது மாபெரும் இசை விழாவாக இது திகழவிருக்கிறது.

‘தேனிசை பாட்ஷா தேவா’ எனும் தலைப்பில் நடைபெறும் இந்தப் பிரம்மாண்ட கலைவிழாவிற்காக, தனது தலைமையில் ஒரு பெரும் கலைஞர்கள் பட்டாளமே பினாங்கிற்கு வருகை தரவுள்ளதாக இசையமைப்பாளர் தேவா உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.








