தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தான், இந்த விவாகரத்திற்கு முக்கியக் காரணமாக அவர் தனது மனுவில் குறிப்பிடப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், சம்பந்தப்பட்ட நடிகை வந்ததால், தங்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் லண்டன் சென்று விட்டதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நடந்த சமரசப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, மீண்டும், சென்னை வந்து விஜயுடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அவசியம் ஏற்பட்டால், அந்த நடிகையின் பெயரையும் தமது விவாகரத்து ஆவணங்களில் சேர்க்கவுள்ளதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.








