Feb 23, 2026
Thisaigal NewsYouTube
நீண்ட இளைவெளிக்குப் பிறகு படங்க குறித்து நடிகர் விக்ரம்
சினிமா

நீண்ட இளைவெளிக்குப் பிறகு படங்க குறித்து நடிகர் விக்ரம்

Share:

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பிற்கு பெயர் போன நடிகர் என ரசிகர்கள் கொண்டாடுவது விக்ரமைத் தான்.

ஒரு கதைக்காக தன்னை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் வருத்தி நடிக்கக் கூடியவர் விக்ரம், அதற்கு உதாரணம் ஐ படம் என்றே கூறலாம்.

கடைசியாக இவரது நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. அடுத்து விக்ரம் படம் குறித்த அறிவிப்பு வரும் பார்த்தால் நீண்ட மாதங்களாக எதுவும் வராமல் இருந்தது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், சில நேரங்களில் மௌனம் என்பது தயார்படுத்திக் கொள்வது. என்னை ஈர்க்கும் கதைகளுக்காகக் காத்திருந்தேன்.

நான் பெரிதும் மதிக்கும் 4 இயக்குனர்களுடன் புதிய படங்களைத் தொடங்குவதால் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை என தெரிவித்திருக்கிறார்.

Related News