இயக்குனர் பா. ரஞ்சித், ‘வெட்டுவம்’ படத்தின் படப்பிடிப்புகளைப் பகுதிகளில் நடத்தி வருகிறார். படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் முக்கியமான காரை விரட்டிச் செல்லும் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் எடுக்கப்பட்டன. படக்காட்சியின் ஒரு பகுதியாக, கார் ஒன்று வேகமாக வந்து, மேலே பறந்து கீழே விழும் காட்சி எடுக்கப்பட்டது. இந்தக் காட்சியில் 52 வயதான சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது காருடன் மேலே பறந்த அவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், காரின் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் மயங்கினார். இதனைக் கண்ட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தொடர்பில் காவல்துறை இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அலட்சியமாகச் செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.