உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர்
மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.