பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆறாவது திரைப்படமான 'மஞ்சணத்தி' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'பைசன் காளமாடன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இத்திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். மாரி செல்வராஜ் மற்றும் இளையராஜா இணையும் முதல் படம் இதுவாகும். இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் நேரடி இசை நிகழ்ச்சியில், இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொலியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இத்திரைப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் காயது லோஹர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மாரி செல்வராஜின் தனித்துவமான பாணியில் உணர்வுப்பூர்வமான கதைக் களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகவுள்ளது.

Related News

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: இணையத்தில் பரவும் வதந்திகள்

கட்டா குஸ்தி 2' படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சோனி விழா தொலைக்காட்சி

மலேசியாவை அரபுத் திரைப்பட வரைபடத்தில் முன்னிலைப்படுத்திய எகிப்தியத் திரைப்படம்

ஜன நாயகன் படத்தில் தந்தை-மகள் பாசம்: 'அடியே என் பூந்தேனே' பாடல் வீடியோ வெளியீடு

திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: கில்லர்மோ டெல் டோரோவின் பிராங்கன்ஸ்டைன் இயக்குநரின் பதிப்பு உறுதி!


