நடிகர் யாஷ் கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறியுள்ளார். அவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் மற்றும் ஹிந்தியில் ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராமாயணம் படத்தில் அவர் இராவணனாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது அட்லீ மற்றும் யாஷ் இருவரும் ஒரு புது படத்திற்காகக் கூட்டணி சேர இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ தற்போது மிகப் பிரம்மாண்டமாக ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு பிறகு தான் யாஷ் உடன் அவர் கூட்டணி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படமும் பிரம்மாண்ட செலவில் பான் இந்தியா படமாக உருவாகிறதாம்.