தமிழகம், மே.05-
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களுக்கும் மேல் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் இன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்ற போது, இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜீவா, ஜித்தன் ரமேஸ் ஆகியோரின் தந்தையான ஆர்.பி சௌத்ரியின் மறைவு திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அவருக்குத் தற்போது திரைப்பிரபலங்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








