எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக வலம் வந்த போது தனது மகன் விஜய்யை நாயகனாக களமிறக்கினார்.
நடிகர் விஜய் ஆரம்பத்தில் நிறைய மோசமான விமர்சனங்களை எதிர் கொண்டாலும் இப்போது அவர் இல்லாத சினிமா எப்படி இருக்கும் என ரசிகர்கள் வருந்தும் அளவிற்கு வெற்றியைக் கண்டார்.
ஆனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்குகிறார். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் சுதீப் நடிக்க படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது.
அவ்வகையில் இன்று நவம்பர் 10, ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. அவரது முதல் படத்திற்கு Sigma என பெயரிட்டுள்ளனர்.








