Jul 22, 2026
Thisaigal NewsYouTube
மகாபாரத கதையில் நடிக்க விரும்பும் நடிகர் அமீர் கான்
சினிமா

மகாபாரத கதையில் நடிக்க விரும்பும் நடிகர் அமீர் கான்

Share:

ராமாயாணம் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வருகிறார். இப்போது விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ண வேடத்தில் அமீர் கான் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அமீர் கான் தான் மகாபாரதத்தை பல பகுதிகளாக படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது தனது கனவு என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கான வேலையில் விரைவில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் மகாபாரதத்தில் தான் கிருஷ்ணராக நடிக்க விரும்புவதாக அமீர் கான் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். மகாபாரதத்தைப் படமாக எடுக்க இருப்பது குறித்து அமீர் கான் அளித்துள்ள பேட்டியில், ''மகாபாரதம் தயாரிக்க வேண்டும் என்பது எனது கனவு. இது ஒரு கடினமாக கனவு. ஜூன் 20, சிதாரே ஜமீன் பர் படம் வெளியான பிறகு மகாபாரத்திற்கான வேலையில் ஈடுபடுவேன். நான் முயற்சி செய்கிறேன். ஆனால் இது பெரிய திட்டம். அது பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை''என்றார்.

மகாபாரத்தில் நீங்கள் எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ''எனக்கு கிருஷ்ணரின் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டேன். எனவேதான் அக்கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்''என்று குறிப்பிட்டார்.

முன்னதாக மகாபாரதம் பல பகுதிகளாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதனை தான் தயாரிக்கப்போவதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அமீர் கான் குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக மட்டும் இருப்பேன் என்று சொன்ன அமீர் கான் இப்போது அதில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகப் பின்னர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்துவதில் அமீர் கான் தீவிரமாக இருக்கிறார்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது