தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான வாணி போஜன் தனியார் நகைக்கடையின் சென்னை கிளையை திறந்து வைத்தார்.
பிரமாண்டமாக துவங்கப்பட்ட வில்வா ஜூவல்ஸ்-ஐ விளக்கேற்றி துவக்கி வைத்த வாணி போஜன், கடையில் உள்ள நகைகளை பார்த்து ரசித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாணி போஜன், "சினிமாவில் மசாலா படத்தை பார்ப்பதை விட நல்ல கருத்துள்ள படங்களை பார்ப்பதில் பெரிய வித்தியாசம்
இருக்கிறது.
சமூக கருத்துள்ள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.