Jul 22, 2026
Thisaigal NewsYouTube
'தங்கலான்' திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
சினிமா

'தங்கலான்' திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

Share:

ஆகஸ்ட்13-

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேர்ந்த அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டார் என்பதும் சில நாட்களில் அவர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அர்ஜுன் லால் சுந்தரிடம் ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 10 கோடி 35 லட்சம் கடன் வாங்கி இருந்தனாக தெரிகிறது.

இந்த தொகையை வட்டியுடன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனை அடுத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவால் ஆனவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ’தங்கலான்’ படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாய் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

அதேபோல் இந்நிறுவனத்தின் இன்னொரு படமாக ’கங்குவா’ படத்தை வெளியிடுவதற்கு முன் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது