தனது மூத்த மகன் யாத்ராவின் திரை அறிமுகம் குறித்த வதந்திகளுக்கு நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தான் நடித்துள்ள 'காரா' திரைப்படத்தின் முன்-வெளியீட்டு விழாவில் இது குறித்து அவர் பேசினார்.
"நான் எனது 16 வயதில் சூழல் காரணமாகத் திரைத்துறைக்கு வந்தேன். அவனுக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது, இப்போதும் அவனை ஒரு குழந்தையாகவே பார்க்கிறேன். அவன் என்னவாகப் போகிறான் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை, இதைப் பற்றிச் சொல்வதற்கு இது மிக ஆரம்பக் கட்டம்," என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
யாத்ரா சினிமாவில் நடிப்பதற்காகக் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சிக்ஸ் பேக் வைத்துள்ளதாகவும் முன்னதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தனுஷ் தனது மகனை இப்போதே அறிமுகப்படுத்தத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.








