May 19, 2026
Thisaigal NewsYouTube
கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் - ரபிசி வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் - ரபிசி வேண்டுகோள்

Share:

பிகேஆர் கட்சியில் இருந்து விலகி பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி, பிகேஆரை விட்டு விலகுபவர்களோ அல்லது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் தொடருபவர்களோ ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருத வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிகேஆர் கட்சியில், இன்னும் தமக்கு நிறைய நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ரபிசி, அவர்கள் அங்கேயே தொடர முடிவு செய்தாலும் தாம் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓர் அரசியல் கட்சியில் இணைவதற்கும், அதில் தொடர்வதற்கும் அல்லது விலகுவதற்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் காரணங்கள் இருப்பதாகவும் ரபிசி குறிப்பிட்டுள்ளார்.

தானும், பிகேஆர் முன்னாள் உதவித் தலைவரான நிக் நஸ்மி நிக் அகமதும், பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியில் இணைந்ததைக் காரணம் காட்டி, எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் என்றும் ரபிசி வலியுறுத்தியுள்ளார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனால் தனிப்பட்ட பகை உருவாகக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

அடுத்த பொதுத்தேர்தலிலும் பண்டான் தொகுதியை பிகேஆர் தக்க வைக்க வேண்டும் / தொகுதித் தலைவர்களுக்கு அன்வார் உத்தரவு

அடுத்த பொதுத்தேர்தலிலும் பண்டான் தொகுதியை பிகேஆர் தக்க வைக்க வேண்டும் / தொகுதித் தலைவர்களுக்கு அன்வார் உத்தரவு

சபாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் - தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

சபாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் - தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

பெட்ரோல், டீசல் விலை குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பெண்ணுக்கு 4000 ரிங்கிட் அபராதம்

பெட்ரோல், டீசல் விலை குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பெண்ணுக்கு 4000 ரிங்கிட் அபராதம்

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெறித்துத் தாக்கிய 4 இளைஞர்கள் கைது - மலாக்காவில் பயங்கரம்

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெறித்துத் தாக்கிய 4 இளைஞர்கள் கைது - மலாக்காவில் பயங்கரம்

16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்

16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்

கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் -... | Thisaigal News