Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது
தற்போதைய செய்திகள்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது

Share:

கோல திரங்காணு பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த கொடூர சாலை விபத்தில், 18 வயது இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் சுமார் 3.36 மணியளவில் நிசான் வெனெட் இரக சிறிய வேனும் வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஜிடிஐ காரும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கோல திரங்காணு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குடும்பம் பயணித்த வோக்ஸ்வாகன் இரக காரானது, கோல திரங்காணு நகர மையத்திலிருந்து லோசோங் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், அந்தக் கார் எதிர்புற சாலையில் புகுந்து பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஓட்டிச் சென்ற சிறிய வேனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் தாக்கத்தில் மின்கம்பம் சரிந்து வேனை ஊடுருவி, இளைஞரின் தலையை துண்டாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர் வா ஹான் கியோங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அஸ்லி நூர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு