நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக, 'மியா ஃபர்ஹாத்' என்ற வங்காளதேச ஆடவரை மலேசிய குடிநுழைவுத்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிற்காக 27 வயதுடைய அந்த அந்நிய நாட்டுப் பிரஜையை கண்டு பிடிப்பதில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இவரின் ஆகக்கடைசியான முகவரி கோலாலம்பூர் சௌ கிட் பகுதியாகும். இவரைப் பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள், விசாரணை அதிகாரி எரசஸிலா அப்துல்லாவை 03-88801338 என்ற எண்ணிலோ, அல்லது அலுவலக நேரத்திற்குப் பிறகு 03-88801555 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.









