Feb 3, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள்: காற்பந்து ரசிகர்களுக்குச் சுல்தான் கடும் எச்சரிக்கை
விளையாட்டு

சிலாங்கூர் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள்: காற்பந்து ரசிகர்களுக்குச் சுல்தான் கடும் எச்சரிக்கை

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.03-

திரெங்கானுவின் அடையாளமாகத் திகழும் இழுவைப் பாலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிலாங்கூர் எஃப்சி (Selangor FC) ஆதரவாளர்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த சம்பவத்தைத் தொடர்ந்து, அத்தகைய நடவடிக்கைகள் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கக்கூடாது என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிலாங்கூர் கால்பந்து கிளப்பின் புரவலரான சுல்தான் ஷாராஃபுடின், இச்சம்பவம் குறித்து மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 33 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர்தனம் போன்ற ஒழுக்கமற்ற செயல்களைத் தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிலாங்கூர் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இச்சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் முழு வீச்சையும் அவர்கள் எதிர்கொள்வதை காவல்துறை உறுதிச் செய்ய வேண்டும் என சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News