ஜப்பான் கால்பந்து ஜாம்பவானான கசுயோஷி மியூரா, தனது 59ஆவது வயதில் புகுசிமா யுனைடெட் அணிக்காகப் போட்டியொன்றில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். ஜப்பான் பேரரசர் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் இவாகி புருகாவா எஃப்சி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அவரது அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தனது 41ஆவது தொழில்முறை கால்பந்துப் பருவத்தைக் கொண்டாடி வரும் கசுயோஷி மியூரா, 'கிங் கசு' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர்களை ஏமாற்றி பந்தைக் கைப்பற்றிய அவர், கோல் வலையை நோக்கி வெற்றிகரமாக அடித்து, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் போட்டி கோலைப் பதிவு செய்தார்.
இந்தச் சாதனை குறித்துப் பேசிய அவர், பயிற்சியாளர் தனக்கு அளித்த வாய்ப்பிற்கும், தமக்கு ஆதரவளித்த அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், 1986ஆம் ஆண்டில் பிரேசிலின் சாண்டோஸ் அணிக்காகத் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது நீண்ட கால கால்பந்து பயணத்தில் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அணிகளுக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








