வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.
இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனமால் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 2-வது நாள் ஆட்டம் தொடங்க கால தாமதம் ஆகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.