Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பிஃபா முதலீட்டுத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சபி அலோன்சோ
விளையாட்டு

பிஃபா முதலீட்டுத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சபி அலோன்சோ

Share:

ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரின் வணிகப் பிரிவில் தனியார் முதலீட்டாளர்களை அனுமதிக்கும் திட்டத்திற்கு செ செல்சியா அணியின் மேலாளர் சபி அலோன்சோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கால்பந்து விளையாட்டு என்பது தனியார் கைகளில் சிக்காமல், எப்போதுமே மக்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தனது அணியின் முற்பருவச் சுற்றுப்பயணத்தின் போது பேசிய அவர், உலகக் கோப்பை போன்ற மதிப்புமிக்க தொடர்கள் தனியார் நிறுவனங்களின் வணிகக் கட்டுப்பாட்டிற்குள் செல்வது விளையாட்டுக்கு நல்லதல்ல என்றார். விளையாட்டு ரசிகர்களின் உணர்வுகளுடனும் ஆதரவுடனும் மட்டுமே அதன் உண்மையான தன்மையைப் பேண முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஃபிஃபாவின் இந்த வணிகமயமாக்கல் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து சங்கமான யுவேஃபா ஏற்கனவே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருவதுடன், உலகக் கோப்பையைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது. இந்தத் திட்டம் ஃபிஃபாவின் நிதி நிலையை உயர்த்தும் என்று ஃபிஃபா தரப்பில் கூறப்பட்டாலும், கால்பந்து உலகம் முழுவதிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Related News