Feb 15, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து இரசிகர்கள் ஒழுக்கத்தைப் பேண வேண்டும்: சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்
விளையாட்டு

கால்பந்து இரசிகர்கள் ஒழுக்கத்தைப் பேண வேண்டும்: சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.15-

கால்பந்து இரசிகர்கள் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நற்பண்புகளுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டு, தமது அணியின், மாநிலத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார். கால்பந்து என்பது பல்வேறு இன மக்களை ஒன்றிணைக்கும் சிறந்த விளையாட்டு என்பதால், இரசிகர்கள் போதைப் பொருள் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி, விளையாட்டு உணர்வோடும் பொறுப்புணர்வோடும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உள்ளூர் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதன் மூலமே சிலாங்கூர் அணி தனது பழைய காலப் புகழை மீண்டும் அடைய முடியும் என்றும், அதன் பெருமையை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News