லிவர்பூல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா, தனது 9 ஆண்டுகால அன்ஃபீல்ட் பயணத்தை முடித்துக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்ற நிகழ்வு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரீமியர் லீக் தொடரின் இறுதி நாளில் ப்ரெண்ட்ஃபோர்ட் அணிக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்துடன் முகமது சாலா மற்றும் ஆண்டி ராபர்ட்சன் ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் லிவர்பூல் அணியில் இருந்து தங்களது கடைசி ஆட்டத்தை விளையாடி விடைபெற்றனர். ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் சாலா மைதானத்தை விட்டு வெளியேறியபோது, சக வீரர்கள் அவருக்கு கௌரவ மரியாதை அளித்தனர். அப்போது மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். இறுதி விசிலுக்குப் பிறகு ரசிகர்கள் தனது பெயரைப் பாடி வாழ்த்தியதைக் கண்டு நெகிழ்ந்த சாலா, தனது மகள்களுடன் மைதானத்தில் நின்றபடி கண்ணீர் விட்டு அழுதார். "என் வாழ்நாளில் நான் அழுததை விட இந்த ஒரு நாளில் அதிகமாக அழுதுவிட்டேன்" என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் நேர்காணலில் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். லிவர்பூல் அணிக்காக 257 கோல்களை அடித்து, பல முக்கிய கோப்பைகளை வென்று தந்துள்ள சாலாவின் இந்த விடைபெறுதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








