சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில், மலேசியாவின் 19 வயது இளம் ஆடவர் இரட்டையர் ஜோடியான ஆரோன் தாய் மற்றும் காங் காய் சிங், உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் சாபர் கார்யாமன் குட்டாமா - முகமது ரெசா பஹ்லேவி இஸ்ஃபஹானி இணையை 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
இந்த சிறப்பான ஆட்டத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வெற்றியாளருமான பி.வி.சிந்து, ஆரோன் தாயை "மிக மிக சுவாரசியமான ஒரு வீரர்" என்று தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். மேலும், ஜூனியர் போட்டிகளில் இருந்தே ஆரோன் தாயின் விளையாட்டைக் கவனித்து வருவதாகவும், களத்தில் அவர் ஆடும் புதுமையான ஷாட்கள் மிகவும் வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்றும் சிந்து குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள சிந்துவின் பயிற்சி கூட்டாளிகள் பலரும் மலேசிய வீரரான ஆரோன் தாயைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊக்கம் ஆரோன் தாய் - காங் காய் சிங் ஜோடிக்கு பெரும் பலத்தைத் தந்துள்ள நிலையில், அவர்கள் இன்று நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் முன்னணி ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணையை எதிர்கொள்கின்றனர்.








