டென்னிஸ் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி. டென்மார்க்கை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். கடந்த 2020-ம் ஆண்டு தனது 29-வது வயதில் வோஸ்னியாக்கி, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இவர் முன்னாள் கூடைப்பந்து வீரர் டேவிட் லீயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன். நான் இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஆனால் நான் இன்னும் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளது.

Related News

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா


