Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க நடவடிக்கை தேவை- பயிற்சியாளர் வேண்டுகோள்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க நடவடிக்கை தேவை- பயிற்சியாளர் வேண்டுகோள்

Share:

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க அனுமதி அளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க அனுமதி அளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் அரங்கேறுகின்றன.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கு 23 வயதுக்கு உட்பட்ட இந்திய கால்பந்து அணியை, சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் மேற்பார்வையில் அனுப்ப இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்து தயாராகி வருகிறது.

மத்திய விளையாட்டு அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறையின்படி குழு போட்டியை பொறுத்தமட்டில் ஆசிய மண்டல தரவரிசையில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் தான் ஆசிய விளையாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்திய கால்பந்து அணி தரவரிசைப்பட்டியலில் 18-வது இடத்தில் இருக்கிறது. இதனால் இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related News