பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயினின் இளம் வீரர் ரஃபேல் ஜோடாரை 7-6, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் 6-4, 6-3, 7-6 என்ற செட்களில் பிரேசிலின் ஜோவோ ஃபொன்சேகாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அரையிறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஜாகுப் மென்சிக்கை எதிர்கொள்ளவுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில், உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் 6-3, 2-6, 6-2 என்ற செட்களில் சக நாட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மிராவை ஆண்ட்ரீவா 6-0, 6-3 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை எளிதில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இதையடுத்து மகளிர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் மார்டா கோஸ்டியுக் மற்றும் மிராவை ஆண்ட்ரீவா ஆகியோர் மோதவுள்ளனர்.








