தேசிய காற்பந்து வீரர் பாலோ ஜோசு, 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியான் பிஃபா கோப்பை மலேசியாவிற்கு ஒரு வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தருவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிராந்திய அளவிலான இந்தப் போட்டி மலேசிய அணி தனது திறமையை நிரூபிக்க ஒரு முக்கியத் தளமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய காலமாக மலேசிய தேசிய அணி காற்பந்து தரவரிசையிலும் ஆட்டத் திறனிலும் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதே இலக்கு என்று அவர் கூறினார். தகுதியான வீரர்கள் மற்றும் முறையான பயிற்சியின் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்றும், ரசிகர்கள் வழங்கும் ஆதரவு வீரர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆசியான் பிராந்தியத்தில் உள்ள மற்ற வலுவான அணிகளுக்கு மலேசியா இம்முறை கடும் சவாலாக விளங்கும் என்று பாலோ ஜோசு மேலும் தெரிவித்தார்.








