அஸ்தானா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) சாய்த்து கோப்பையை கைப்பற்றினார். இந்த ஆண்டில் ஜோகோவிச்சுக்கு இது 4-வது மகுடமாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது. அதிகம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள 35 வயதான ஜோகோவிச் கூறுகையில், 'எனது டென்னிஸ் வாழ்க்கை நன்றாக அமையும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. ஆனால் இத்தனை தடவை இறுதிசுற்றுக்கு செல்வேன். இத்தனை பட்டங்களை வெல்வேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. எனது விளையாட்டில் உயரிய நிலையை அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது' என்றார்

Related News

தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடிப் போட்டியில் சிலாங்கூர் வாகை சூடியது

ஹாங்காங் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டி இறுதியாட்டத்தில் சிவசங்கரி தோல்வி

விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

விளையாட்டுத்துறை செய்தியாளரைத் தவறுதலாகத் தாக்கியிருக்கலாம்

7 பாரம்பரிய ஆட்டக்காரர்களின் இரட்டை குடியுரிமைக் கடப்பிதழ்கள்: உள்துறை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்


