முன்னாள் இங்கிலாந்து நடுகள ஆட்டக்காரரான ஜேம்ஸ் மில்னர், பிரீமியர் லீக்கில் 24 சீசன்கள் விளையாடிய பிறகு, தனது 40ஆவது வயதில் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரீமியர் லீக்கில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனைக்குரியவரான பிரைட்டன் அணியின் இந்த வீரர், மொத்தம் 658 போட்டிகளில் பங்கேற்று தனது கால்பந்து பயணத்தை நிறைவு செய்துள்ளார். லீட்ஸ் அணியில் தனது 16ஆவது வயதில் கால்பந்து பயணத்தைத் தொடங்கிய அவர், மான்செஸ்டர் சிட்டி அணியுடன் இரண்டும், லிவர்பூல் அணியுடன் ஒன்றுமாக மொத்தம் மூன்று பிரீமியர் லீக் பட்டங்களை வென்றுள்ளார்; மேலும் லிவர்பூல் அணியுடன் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளார். சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணிக்காக 61 போட்டிகளில் விளையாடியுள்ள மில்னர், கிளப் மற்றும் நாட்டுக்காக ஒட்டுமொத்தமாக 964 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

39 வயதில் அர்ஜென்டினாவிற்கு மீண்டும் ஒரு உலகக் கோப்பையை மெஸ்ஸி வென்று தருவாரா? ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

ஜோகோவிச்சை வீழ்த்தி பிரெஞ்சு ஓபனில் வரலாற்று சாதனை படைத்தார் இளம் வீரர் ஃபொன்சேகா

"ஆரோன் தாயின் ஆட்டம் மிக மிக சுவாரசியமானது" - இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து பாராட்டு

உலகக் கோப்பை கால்பந்து: விசா தாமதத்தால் அமெரிக்காவில் பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் ஈரான் அணி

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச் போராடி வெற்றி; எலினா ரைபாகினா அதிர்ச்சித் தோல்வி


