செபாக் தக்ரோ உலகக்கோப்பை 2026 தொடரில் ‘குவாட்ரண்ட்’ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மலேசிய தேசிய அணிக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியானது மலேசியாவை உலக அரங்கில் உயர்த்துவதோடு, உள்ளூர் வீரர்கள் உறுதி, ஒற்றுமை மற்றும் சர்வதேச மட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளதாக அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மிகத் திறமையாக விளையாடிய அவர்களை தேசிய ஹீரோக்கள் எனக் குறிப்பிட்டுள்ள அன்வார், அவர்கள் வெளிப்படுத்திய போராட்ட மனப்பான்மை அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை அளிப்பதாக தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மலேசிய அணியானது இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, 2026 செபாக் தக்ரோ உலகக் கோப்பைத் தொடரின் அறிமுக குவாட்ரண்ட் கோப்பையை கைப்பற்றியது.
இந்த இறுதிப்போட்டியானது நேற்று இரவு தித்திவங்சா மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.








