கோலாலம்பூர், பிப்ரவரி.25-
நாட்டின் இந்திய வீராங்கனை ஜஸ்மீன், சீனர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வுஷூ விளையாட்டில் மிளிர்ந்து வருகிறார். அதில் ஒரே இந்தியப் பெண்ணாக அவர் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
அண்மையில் அவர் சீனாவில் நடைபெற்ற 9 ஆவது உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வுஷூ பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். ஜஸ்மீன் நாட்டிற்குப் பெருமையும் சேர்த்துள்ளார்.
இவ்வேளையில் ஜஸ்மீனை நேரில் சந்தித்த தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ஜஸ்மீனுக்கு நற்சான்றிதழையும் உதவித் தொகையையும் அவர் வழங்கினார். அதோடு அமைச்சின் சார்பில் ஜஸ்மீனுக்கு அங்கீகாரமும் உதவிகளும் வழங்கப்படும் என யுனேஸ்வரன் தெரிவித்தார்.








