அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய சமாதான முன்மொழிவை நிராகரித்துள்ளார். ஈரானின் சமாதானத் திட்டத்தில் தனக்குத் திருப்தி இல்லை என்றும், அந்நாட்டின் தலைவர்களிடையே நிலவும் முரண்பாடுகளால் ஒப்பந்தம் எட்டப்படுவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும், சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானைத் தாக்கி அழிக்கவும் தயங்கப்போவதில்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார். எனினும், மனிதநேய அடிப்படையில் தான் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க விரும்புவதாகவும், பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நல்ல முடிவுக்கு வர முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வினாத்தாள் கசிவு: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: சீனாவின் உதவி தேவையில்லை என ட்ரம்ப் அதிரடி

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி: அமைதி மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்


