சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரிசூலம், சுமார் 2.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கைலாசகிரி மலையில் ஏற்கனவே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் பிரம்மாண்ட சிலைகள் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் நிலையில், தற்போது இந்த 65 அடி உயர திரிசூலம் அங்கு கூடுதல் ஈர்ப்பாகச் சேர்ந்துள்ளது.
இந்தத் திரிசூலம் துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இது விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








