தென்கொரியாவில் உள்ள உலகின் 5-வது உயரமான கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். லோட்டி வேர்ல்டு டவர் கட்டிடத்தின் மீது 24 வயதான ஜார்ஜ் கிங் தாம்சன் ஏறினார். கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் அவர் ஏறியதால், 73வது தளத்தில் தடுத்து நிறுத்தி பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போலீசாரிடம் அவரை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். ஜார்ஜ் கிங் இதற்கு முன் 2019ம் ஆண்டில் லண்டனில் உள்ள 72 மாடிகளை கொண்ட ஷார்டு கட்டிடத்தில் ஏறிய போது ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

நேட்டோ அமைப்பு நிறுவனத்தில் உளவாளியாகச் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் நபர் கைது

சீனாவில் நவுல் புயல் எச்சரிக்கை: ரயில்கள் மற்றும் பள்ளிகள் முடக்கம்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம்: டிரம்ப் புதிய உத்தரவு


