Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
உலகச் செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Share:

கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி போராடி வரும் 31 வயது இளையரான ஹரீஷ் ராணா என்பவரைக் கருணைக் கொலை செய்ய டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ், கடந்த 2013-ஆம் ஆண்டு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த போது, அவ்விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி தாவரம் போன்ற நிலையில், இருந்து வந்தார்.

இந்நிலையில், தங்கள் மகனுக்குப் பொருத்தப்பட்டுள்ள செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றி, கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஹரீஷின் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற அனுமதி வழங்கியது.

Related News

புதிய சட்டத்தால் பல லட்சம் அமெரிக்கர்களுக்குக் கனடா குடியுரிமை: எல்லையில் குவியும் விண்ணப்பங்கள்!

புதிய சட்டத்தால் பல லட்சம் அமெரிக்கர்களுக்குக் கனடா குடியுரிமை: எல்லையில் குவியும் விண்ணப்பங்கள்!

இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்" – முழுநேர அரசியலில் இறங்கியதை உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய்!

இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்" – முழுநேர அரசியலில் இறங்கியதை உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய்!

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் மீண்டும் நீதிமன்றத்தில்: கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு!

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் மீண்டும் நீதிமன்றத்தில்: கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு!

டொராண்டோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறை தீவிர விசாரணை

டொராண்டோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறை தீவிர விசாரணை

ஆகாயப் படை சிறப்பு விமானத்தில் சவூதியிலிருந்து நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள்

ஆகாயப் படை சிறப்பு விமானத்தில் சவூதியிலிருந்து நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள்

மேற்காசிய போர் தீவிரம்: இந்தியாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடல்

மேற்காசிய போர் தீவிரம்: இந்தியாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடல்