கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி போராடி வரும் 31 வயது இளையரான ஹரீஷ் ராணா என்பவரைக் கருணைக் கொலை செய்ய டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ், கடந்த 2013-ஆம் ஆண்டு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த போது, அவ்விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி தாவரம் போன்ற நிலையில், இருந்து வந்தார்.
இந்நிலையில், தங்கள் மகனுக்குப் பொருத்தப்பட்டுள்ள செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றி, கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஹரீஷின் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற அனுமதி வழங்கியது.








